ஆப்நகரம்

சகோதரியின் மகனை கொலை செய்த ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை!

மதுரையில் சொத்துப் பிரச்சனை காரணமாக, சகோதரியின் மகனை கொலை செய்த ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுள்ளது.

Samayam Tamil 22 Feb 2019, 4:15 pm
மதுரையில் சொத்துப் பிரச்சனை காரணமாக, சகோதரியின் மகனை கொலை செய்த ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுள்ளது.
Samayam Tamil download (2)


மதுரையில் உள்ள திருவேங்கட தட்சம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஓய்வுபெற்ற ராணுவீரரான ஆறுமுகத்திற்கும் அவரது சகோதரிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு சொத்துத் தகாராறு ஏற்பட்டது. ஆனால் அப்போது ஆறுமுகம் ராணுவத்தில் பணியாற்றியதால் இந்த தகராறு பெரிதாகவில்லை.

இந்நிலையில் அவர் ஓய்வுபெற்றவுடன் தனது ஊருக்கு திரும்பினார். அப்போதுஅவருக்கும் அவரது சகோதரியின் மகனான சுப்ரமணியனுக்கும் சொத்து பிரச்சனை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே சுப்பிரமணியனை ஆறுமுகம் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சமயநல்லூர் காவல்துறையினர் , ஆறுமுகத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு இன்று மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சகோதரியின் மகனை கொலை செய்த குற்றத்திற்கு ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனையும் , ரு15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி