ஆப்நகரம்

'ஆர்எஸ்எஸ் தலைவர் என்ன ஜனாதிபதியா?' மதுரையை அமர்க்கள படுத்த முயன்ற அதிகாரிக்கு செக்..!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் மதுரை வருகையையொட்டி சுற்றறிக்கை வெளியிட்ட துணை ஆணையர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Samayam Tamil 22 Jul 2021, 2:22 pm
மதுரை சத்யசாய் நகரில் அமர்ந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பகவத் வருகை தருவதாக அண்மையில் தகவல் வெளியானது. அதுதொடர்பாக மதுரை மாநகராட்சி துணை ஆணையர் வெளியிட்ட சர்குலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Samayam Tamil கோப்புப்படம்


அந்த சர்குலரில், ஜூலை 22 முதல் 26 வரை மோகன்பகவத் மதுரையில் இருப்பார் என்றும் அவரது வருகையை முன்னிட்டு விமானநிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்துகொண்டு அங்கெல்லாம் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், தெரு விளக்குகளை சீரமைத்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும், மோகன்பகவத் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் எதுவும் நடக்கக்கூடாது என்பதை கவனிக்க வேண்டுமென்று அணைத்து மண்டல அலுவலர்களுக்கும் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இது பெரும் பேசுபொருளாக நிலையில், தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சியா? மோகன் பகவத் என்ன ஜனாதிபதியா? பிரதமரா ? அல்லது வெளிநாட்டு அதிபரா? இத்தனை அமர்க்கள ஏற்பாடுகள் மதுரை மாநராட்சி நிர்வாகத்தின் உதவி ஆணையர் பெயரில் இப்படியொரு சுற்றறிக்கை வந்துள்ளதே
தமிழக முதல்வருக்கு இது தெரியுமா? என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன.


மேலும், அந்த சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி விவாதத்தை கிளப்பியது. இதனிடையே, அந்த சுற்றறிக்கையை வெளியிட்ட மாநகர துணை ஆணையர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதான உத்தரவு வெளியாகி இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தது. அந்த உத்தரவில், '' மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராக அற்பணியில் பணிபுரிந்து வந்த சண்முகத்தை ஜூலை 21 அன்று மதுரை மாநகராட்சி பதவியில் இருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி