ஆப்நகரம்

உயிர் பாதுகாப்பு கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் குடும்பத்துடன் தஞ்சம்!

தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஓட்டுனர் குடும்பத்தோடு தஞ்சம் அடைந்துள்ளார்.

Samayam Tamil 10 May 2019, 11:18 am
தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஓட்டுனர் குடும்பத்தோடு தஞ்சம் அடைந்துள்ளார்.
Samayam Tamil WhatsApp Image 2019-05-10 at 09.21.17.


மதுரை மூடுவார்பட்டியில் குடியிருந்து வருபவர் ராஜா. இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் சேகர் மற்றும் அவரது அண்ணன், தம்பிகள் இவர்களுக்கும் மின்சார கம்பங்கள் பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி சேகர் மற்றும் அவரது அண்ணன், தம்பிகள் குடும்பத்தினருடன் சுமார் 10 பேர் கொண்ட கும்பலோடு ராஜா வீட்டிற்கு சென்று மின் கம்பத்தை அகற்றுமாறு தகராறு செய்துள்ளனர். அப்போது ராஜா நீங்கள் மின்சார வாரிய தொடர்புகொண்டு சரி செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

பின்னர் அவர் குடும்பத்துடன் சேர்ந்து ராஜாவை கடப்பாறை கம்பியால் தலையில் தாக்கியுள்ளனர். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு மனு கொடுத்து பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 8ம் தேதி அன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய உடன் மேற்கண்ட நபர்கள் மீண்டும் ராஜாவை அவரது வீட்டில் சந்தித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. ஆகவே, அவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்துள்ளார்.

அடுத்த செய்தி