ஆப்நகரம்

16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது

பதினாறு வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 28 Mar 2019, 11:01 am
பதினாறு வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil download (7)


மதுரையில் உள்ள செல்லூர் பகுதியில் நிர்மலா என்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் இவரிடம் டியூஷன் படித்துள்ளார். அந்த சிறுவனை தனியாக அழைத்து சென்ற நிர்மலா, ஒத்தக்கடையில் உள்ள தனியறையில் வைத்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் 4 நாட்கள் இந்த சம்பவம் தொடர்ந்து நடந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அந்தச் சிறுவன் பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் நிர்மலாவை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

அடுத்த செய்தி