மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை, இளைஞர்கள் மத்தியில் நல்ல உணவுப் பழக்கத்தை உருவாக்க புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.
மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்புதுறை, இளைஞர்கள் மத்தியில் நல்ல உணவுப் பழக்கத்தை உருவாக்க ’லேடி டோக் கல்லூரி’யில் நான்கு வகையான உணவு ஸ்டால்களை அமைத்துள்ளது. பாதுகாப்பில்லாத உணவு வகைகள் கொண்ட ஸ்டால், பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்ட ஸ்டால், ஆரோக்கியமான உணவு வகைகள் கொண்ட ஸ்டால் மற்றும் மாற்று உணவு வகைகளை கொண்ட ஸ்டால் என்று நான்கு வகையான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் இந்த நிகழ்விற்கு வந்துள்ளதால், மாவட்ட உணவுப் பாதுகாப்புதுறை இந்த புதிய வகை முயற்சியை செய்துள்ளது.
பாதுகாப்பில்லாத உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்த ஸ்டாலில் உணவு பொருட்களை வாங்க மாணவர்கள் வந்தபோது, அவர்களிடம் தூரித உணவுகளை உண்பதால் ஏற்பட்ட விளைவுகளையும், அதில் செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதையும் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மருத்துவர் எம் சோமசுந்தரம் கூறினார்.
மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சி மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்புதுறை, இளைஞர்கள் மத்தியில் நல்ல உணவுப் பழக்கத்தை உருவாக்க ’லேடி டோக் கல்லூரி’யில் நான்கு வகையான உணவு ஸ்டால்களை அமைத்துள்ளது. பாதுகாப்பில்லாத உணவு வகைகள் கொண்ட ஸ்டால், பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்ட ஸ்டால், ஆரோக்கியமான உணவு வகைகள் கொண்ட ஸ்டால் மற்றும் மாற்று உணவு வகைகளை கொண்ட ஸ்டால் என்று நான்கு வகையான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் இந்த நிகழ்விற்கு வந்துள்ளதால், மாவட்ட உணவுப் பாதுகாப்புதுறை இந்த புதிய வகை முயற்சியை செய்துள்ளது.
பாதுகாப்பில்லாத உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்த ஸ்டாலில் உணவு பொருட்களை வாங்க மாணவர்கள் வந்தபோது, அவர்களிடம் தூரித உணவுகளை உண்பதால் ஏற்பட்ட விளைவுகளையும், அதில் செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதையும் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மருத்துவர் எம் சோமசுந்தரம் கூறினார்.
மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சி மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.