ஆப்நகரம்

ஜூலை 6 வரை திவ்யபாரதியைக் கைது செய்யத் தடைவிதித்தது உயர்நீதிமன்றக் கிளை!!

ஆவணப்பட இயக்குநரும், வழக்கறிஞருமான திவ்யபாரதியை ஜூலை 6 ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 4 Jul 2018, 8:07 pm
ஆவணப்பட இயக்குநரும், வழக்கறிஞருமான திவ்யபாரதியை ஜூலை 6 ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil ஜூலை 6 வரை திவ்யபாரதியைக் கைது செய்யத் தடைவிதித்தது உயர்நீதிமன்றக் கிளை!!
ஜூலை 6 வரை திவ்யபாரதியைக் கைது செய்யத் தடைவிதித்தது உயர்நீதிமன்றக் கிளை!!


ஆவணப்பட இயக்குநரும், எழுத்தாளருமான திவ்யபாரதி “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தை இயக்கி இருந்தார். இந்த ஆவணப்படம் தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட ஒக்கி புயல் பாதிப்புகளை பதிவு செய்யும் வகையில், “ஒருத்தரும் வரேல” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ள்ளார். இப்படத்தின் டீசா் அண்மையில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், திங்கள் கிழமை திவ்யபாரதியின் தந்தையிடம் படம் தொடா்பாக காவல் துறையினா் கேள்வி எழுப்பி உள்ளனா். இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்த நிலையில், நேற்று அதிகாலை காவல் துறையினா் அவரது வீட்டிற்கு சென்று திவ்ய பாரதி குறித்தும், ஆவணப்படம் குறித்தும் விசாரித்துள்ளனா்.

மேலும் 15க்கும் மேற்பட்ட காவல் துறையினா் அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னா் நீதிமன்றத்திற்கு வந்த திவ்யபாரதியிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது எங்களுடன் வா என்று அழைத்துள்ளனா். அதற்கு சக வழக்கறிஞா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, திவ்ய பாரதி முன்ஜாமீன் வழங்கக் கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு அளித்தார். இந்த வழக்கு விசாரணையில், திவ்யபாரதி மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திவ்யபாரதியை வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என உயர்நீதிமன்றக் கிளை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி