ஆப்நகரம்

தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்க தடை- உயர்நீதிமன்றத்தில் மனு

தேர்தல் பிரச்சாரத்தில் உள்ள வேட்பாளர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுப்பதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

Samayam Tamil 26 Apr 2019, 11:25 pm
மதுரை திருநகரை சேர்ந்த தங்க லெட்சுமி தாக்கல் செய்த மனுவில், "திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற மே மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. தற்பொழது இந்த தேர்தலுக்காக வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Samayam Tamil வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்க தடை- உயர்நீதிமன்றத்தில் மனு
வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்க தடை- உயர்நீதிமன்றத்தில் மனு


இந்த நிலையில் பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய செல்கையில் அந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் , முக்கிய பிரமுகர்களுக்கு ஆரத்தி எடுக்கின்றனர்.

அப்படி ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு ரூ 2000, ரூ 500,௹ 200 என அந்த அந்த கட்சிகளுக்கு தகுந்தாற்போல அன்பளிப்பு வழங்கப்படுகிறது. இப்படி பணம் வழங்குவது தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது, இந்திய தண்டனை சட்டப்படி குற்ற செயலாகும். எனவே, வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் , முக்கிய பிரமுகர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

அடுத்த செய்தி