ஆப்நகரம்

தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 1 Jun 2018, 11:48 am
மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
Samayam Tamil Madurai HC.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் முத்து அமுதநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க உத்தரவிடுமாறு கந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த இரு வழக்குகளையும் விசாரித்த நீதிபதிகள், அரசு தரப்பு வழக்கறிஞரின் பதிலைக் கேட்டது. ஆனால் அதில் திருப்தி இல்லாததால், தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து, 2 பேர் தொடர்ந்த வழக்கில், வரும் 6ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.

Madurai High Court orders TN govt to reply, why firing was happened in Tuticorin.

அடுத்த செய்தி