ஆப்நகரம்

நிர்மாலா தேவி வழக்கில் உயர்நீதிமன்றம் கெடு!

பேராசிரியர் நிர்மலா தேவியின் வழக்கை ஆறு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கீழ்நதிமன்றத்துக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளை கெடு விதித்துள்ளது.

Samayam Tamil 12 Jul 2018, 2:13 pm
மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவியின் வழக்கை ஆறு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கீழ்நதிமன்றத்துக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளை கெடு விதித்துள்ளது.
Samayam Tamil nirmala


அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியல் பாதைக்கு அழைத்து செல்வதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பல உயர் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்டோர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், நிர்மலாதேவி வழக்கில் செப்டம்பர் 10ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி.,க்கு உத்தரவிடப்பட்டது. செப்டம்பர் 24ம் தேதி முல் ஆறு மாதத்துக்குள் வழக்கு விசாரணைய விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி