ஆப்நகரம்

மதுரை பல்கலைகழக வளாகத்தில் பேராசிரியருக்கு கத்திக்குத்து..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் ஜெனிஃபாவை முன்னாள் விரிவுரையாளர் ஜோதி முருகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 26 Sep 2017, 12:58 pm
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் ஜெனிஃபாவை முன்னாள் விரிவுரையாளர் ஜோதி முருகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil madurai kamaraj university professor attacked by the scholar
மதுரை பல்கலைகழக வளாகத்தில் பேராசிரியருக்கு கத்திக்குத்து..!


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையின் தலைவராக பணியாற்றி வருபவர் பேராசிரியர் ஜெனிஃபா. அதே பல்கலைகழக துறையில் ஜோதி முருகன் என்பவர் B.A, M.A, M.PHIL, PH.D, ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார். மேலும் அவர் இந்த இதழியல் துறையில் தற்காலிக பேராசிரியராக கடந்த இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இந்தாண்டுக்கான தற்காலிக பேராசிரியருக்கான நேர்முக கலந்தாய்வு பல்கலைகழகத்தில் நடந்துள்ளது. இதில் ஜோதி குமாரும் கலந்து கொண்டுள்ளார். ஆனால் ஜோதி முருகன் மேல், மாணவர்கள் தொடர் புகார்கள் கொடுத்ததன் காரணமாக பல்கலைகழக நிர்வாகம் இவரை தேர்வு செய்யாமல் மற்ற இரண்டு பேரையும் தேர்வு செய்தது.

இந்த நிலையில் தன்னை தேர்வு செய்யாததற்கு பேராசிரியை ஜெனிஃபா தான் காரணம் என்று நினைத்த ஜோதி முருகன் அவரை பழி வாங்க நினைத்துள்ளார். இந்த நிலையில் விடுமுறை முடிந்து இன்று பல்கலைகழகத்திற்கு வந்த பேராசிரியை ஜெனிஃபாவை, ஜோதி முருகன் கத்தியால் பலமுறை தாக்கியுள்ளார். இதைப் பார்த்த மாணவர்களும் சக பேராசிரியர்களும் ஆசிரியை ஜெனிஃபாவை, நாகமலை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் அவரது உயிருக்கு பாதிப்பில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஜெனிஃபாவை கத்தியால் தாக்கிய ஜோதி முருகனை மாணவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைந்தனர். இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பல்கலைகழகத்திலேயே இந்த சம்பவம் மாணவர்களிடமும், சக பேராசிரியர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Madurai kamaraj university professor attacked by the scholar.

அடுத்த செய்தி