ஆப்நகரம்

மதுரையில் வீட்டில் ஓயவு எடுத்துக் கொண்டிருந்தவர் கழுத்தறுத்து கொலை: போலீசார் தீவிர விசாரணை

மதுரையில் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். மோப்ப நாய் கொண்டு போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர்.

Samayam Tamil 10 Sep 2019, 11:41 am
மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கரையான்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன் (55). வைகை ஆற்று கரையோரம் நர்சரி கார்டன் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினரிடம் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர்களை பிரிந்து வைகை ஆற்றங்கரையோரம் குடிசை அமைத்து குள்ளபுரம் கிராமத்தை சேர்ந்த நடுத்தர வயதுடைய ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார்.
Samayam Tamil madurai mur imp

குபேந்திரனுக்கு சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் இடது கால் அகற்றப்பட்டது. இதனால் அவர் வீட்டிலே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் குபேந்திரனுடன் வசித்து வந்த பெண் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது குபேந்திரன் ரத்தம் வெள்ளத்தில் கழுத்தறுப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அந்தப் பெண், கொலை குறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலையடுத்து டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விசாரணைக்காக சம்பவ இடதுக்கு மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டன. மோப்ப நாய்கள், கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிமி தூரத்தில் இருக்கும் ஒரு டி கடை வரை சென்றது.
சம்பவம் குறித்து குபேந்திரனுடன் வசித்து வந்த பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன், வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை பதிவுகளையும் சேகரித்துக் கொண்டனர். இதற்கிடையில், குபேந்திரன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட குபேந்திரனுக்கு சொந்தமான சொத்துக்கள் கரையான்பட்டியில் அதிகளவில் உள்ளது. இதனால், சொத்துக்காக குடும்பத்தினரே கொலை செய்துவிட்டனரா அல்லது முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா என்ற கோணங்களில் ஆண்டிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி