ஆப்நகரம்

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை!!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் உதயராஜ் இன்று காலை தனக்கு தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Sep 2019, 4:21 pm
விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் மாணவர் உதயராஜ். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2ஆம் ஆண்டு மயக்கவியல் பாடம் படித்து வந்தார். முனிசிபல் காலனியில் இருக்கும் விஜயகுமார் என்பவரது வீட்டில் தங்கி படித்து வந்தார். இவருடன் இவரது நண்பர் ராஜேசும் தங்கி இருக்கிறார். நேற்று இரவு கல்லூரிக்குச் சென்றவர் தனது அறைக்கு திரும்பினார். அவரது நண்பர் வேலைக்குச் சென்றுவிட்டார்.
Samayam Tamil MM


இன்று காலை வீடு திரும்பிய அவரது நண்பர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் மதிச்சியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விரைந்து வந்த மதிச்சியம் காவல் துறையினர் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது அவரது உடலைச் சுற்றி ஊசி மற்றும் மருந்து பாட்டில் இருந்தது தெரிய வந்தது. அது விஷ மருந்து என்பது தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அறையில் இருந்த கடிதத்தை காவல் துறையினர் எடுத்தபோது, அதில், ''பணிச் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி