ஆப்நகரம்

மதுரை ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறக்கப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து தடை செய்யப்பட்டிருந்த ஆயிரங்கால் மண்டபம் பகுதி மீண்டும் பாா்வையாளா்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Apr 2018, 5:23 pm
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து தடை செய்யப்பட்டிருந்த ஆயிரங்கால் மண்டபம் பகுதி மீண்டும் பாா்வையாளா்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil meenakshi amman temple


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கோவிலின் பழமையான சிற்பங்கள், ஓவியங்கள் சேதமடைந்தன. கோவில் வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் ஏற்றப்பட்ட கற்பூரம் தான் தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

தீ விபத்து தொடா்பாக மத்திய நிபுணா் குழு மீனாட்சியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டது. இதனைத் தொடா்ந்து நிபுணா் குழுவினா் கூறுகையில், தீ விபத்தில் வீரசந்திராயா் மண்டபம் சேதம் அடைந்துள்ளது. மேலும் சில சிற்பங்கள், ஓவியங்களும் சேதமடைந்துள்ளன என்று தொிவித்தனா்.

மேலும், விபத்து ஏற்பட்டதற்கு மிகவும் அருகில் இருந்த ஆயிரம் கால் மண்டபத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதே போன்று தங்க தோ் மண்டபம், பழைய கல்யாண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் ஆயிரங்கால் மண்டபம், வீரசந்திராயா் மண்டபங்களில் மேலும் சில நுண்ணிய ஆய்வுகள் நடத்தப்பட இருப்பதாக தொிவித்தனா்.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆயிரங்கால் மண்டபம் பொதுமக்கள் பாா்வைக்காக இன்று முதல் திறக்கப்பட்டள்ளது. இதனால் பொதுமக்களும், பக்தா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அடுத்த செய்தி