ஆப்நகரம்

சொமாட்டோ நிறுவனரை கிழித்தெடுத்த சு.வெங்கடேசன்!

சொமாட்டோ நிறுவனரின் கருத்துக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 20 Oct 2021, 1:59 pm

ஹைலைட்ஸ்:

  • அறியா தவறு தேசப் பிரச்சினை ஆகிவிட்டது... உண்மைதான் தீபிந்தர் கோயல்
  • பன்மைத்துவத்தை பாதுகாக்கும் வரலாறு. அறியாமை வரலாற்று ரீதியான மேலாதிக்க உளவியல்
  • தன்மை சம்பந்தப்பட்டது அல்ல. இந்தித் திணிப்புக்கு எதிரான தலைமுறை கோபம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்
உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் (Zomato) தமிழகத்தை சேர்ந்த விகாஷ் என்பவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டரில் பிரச்சினை ஏற்பட்டதும் வாடிக்கையாளர் சேவை முகவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதற்கு அந்த வாடிக்கையாளர் சேவை முகவரோ, “இந்தி நம் தேசிய மொழி. நம் தேசிய மொழியை கொஞ்சமாவது கற்றுக்கொள்வது நல்லது” என்று கூறியுள்ளார்.
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்த பதிலை ஸ்கீர்ன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்த விகாஷ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, இந்தி தணிப்புக்கு எதிராக தமிழகம் சமூக வலைதளங்களில் கொந்தளித்தது. சொமாட்டோ நிறுவனத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி #Reject_Zomato என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இதையடுத்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த சொமாட்டோ, வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள், மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை. ஊழியரை பணியிடை நீக்கம் செய்து விட்டோம். நாங்கள் தமிழ்நாட்டை நேசிக்கிறோம் என்று தமிழில் அறிக்கை வெளியிட்டது.
சசிகலாவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமும் கிடையாது: ஈபிஎஸ் திட்டவட்டம்!
அதன் தொடர்ச்சியாக, சொமாட்டோ நிறுவனர் தீபேந்த கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில்,”உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் சிறிய பேச்சு தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. நம் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய் விட்டாதா எனவும் இதற்கு யாரை குறை சொல்வது என தெரியவில்லை என்று பதிவிட்டிருந்தார்.


அவரது இந்த பதிவும் சர்ச்சையானது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தீபேந்த கோயலை டேக் செய்து, “வாடிக்கையாளர்களுக்கு சகிப்பு வேண்டும் என்ற சொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவுரை, உங்கள் நிறுவனம் வெளியிட்ட மன்னிப்பு அறிவிப்புக்கு எதிரானது. தமிழ் நாட்டின் வரலாறை அறிய வேண்டும். பிரச்னை, சகிப்பு தன்மை சம்பந்தப்பட்டது அல்ல. இந்தித் திணிப்புக்கு எதிரான தலைமுறை கோபம்” என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், “அறியா தவறு தேசப் பிரச்சினை ஆகிவிட்டது... உண்மைதான் தீபிந்தர் கோயல். அது தமிழகத்திலுள்ள விழிப்பின் வெளிப்பாடு. பன்மைத்துவத்தை பாதுகாக்கும் வரலாறு. அறியாமை வரலாற்று ரீதியான மேலாதிக்க உளவியல்” என்றும் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி