ஆப்நகரம்

மதுரையில் 120 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த அம்மாபேரவை !

ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் 120 ஜோடிகளுக்கு அம்மா பேரவை சார்பில் இன்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.

Samayam Tamil 30 Mar 2018, 11:12 am
ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் 120 ஜோடிகளுக்கு அம்மா பேரவை சார்பில் இன்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.
Samayam Tamil edapadi-panneer_2017_8_22




மதுரையில் உள்ள பாண்டிகோயிலில் 120 ஜோடிகளுக்கு இன்று அம்மா பேரவை சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் பன்னீர் செல்வம் , அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி , காமராஜ்உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இந்த திருமண விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருமணம் செய்துகொள்ளும் 120 ஜோடிகளுக்கு 70 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்து மத முறைப்படி வேதங்கள் முழங்க 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

120 ஜோடிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருமண ஜோடிகளை வாழ்த்தினார். இதற்கு முன்னதாக கோவையில் அதிமுக சார்பில் 86 ஏழை ஜோடிகளுக்கு கடந்த வாரம் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி