ஆப்நகரம்

ஆர் வாலெட் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு, ரயில் கட்டணத்தில் சலுகை!

ஆர் வாலெட் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு, ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் போனஸ் சலுகை கிடைக்கும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 May 2018, 2:37 pm
ஆர் வாலெட் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு, ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் போனஸ் சலுகை கிடைக்கும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Samayam Tamil uts-app-review
ஆர் வாலெட் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு, ரயில் கட்டணத்தில் சலுகை!


இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:

விரைவு ரயில் மற்றும் பாசஞ்சர் ரயிலில் பயணிப்போர் செல்போனில் UTS App வாயிலாக டிக்கெட் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

இதன்வாயிலாக 3 சதவீதம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து பயன்பெற்று வருகின்றனர். இதற்கான பணத்தை அவர்கள் ஆர் வாலேட், கிரெடிட்-டெபிட் கார்டுகள் வாயிலாகவோ, அல்லது பயணசீட்டு அலுவலகத்திலோ செலுத்தி வருகின்றனர். இதற்காக மத்திய அரசு கூடுதல் சேவை கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை.

இந்த நிலையில் ‘ஆர் வாலெட்’ மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆர் வாலெட்டில் பணம் செலுத்தும்போது, பயனாளிகளின் கணக்கில் 5 சதவீதம் போனஸ் தொகை வரவு வைக்கப்படும்.

உதாரணமாக பயணி ஒருவர் ஆர் வாலெட்டில் 1000 ரூபாய் பணம் செலுத்தினால், அவரின் கணக்கில் ரூ.1050 வரவு வைக்கப்படும். செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், இத்தகைய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மதுரை ரயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி