ஆப்நகரம்

தமிழ் மொழி மீது தீராத ஆர்வம்; மதுரையில் குவிந்த இளைஞர் பட்டாளம்!

மதுரை: தமிழ் மொழி குறித்த பயிலரங்கில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Samayam Tamil 6 Jan 2019, 8:22 am
மதுரை தமிழ் சங்கம் சாலையில் செந்தமிழ் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு ‘பிழையின்றி எழுதுவது எப்படி’ என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கு நடைபெற்றது. இதற்கு நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
Samayam Tamil Tamil


அவரை கல்லூரி முதல் வேணுகா வரவேற்று சிறப்பித்தார். இந்த பயிலரங்கில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பிழையின்றி எழுதுவது, பேசுவது குறித்து திருவையாறு அரசர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஞானசம்பந்தம் பயிற்சி அளித்தார்.

இதையடுத்து மாணவர்கள் இடையே கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதனை உதவி பேராசிரியை நந்தினி, மாணவர்கள் கார்த்திகா, அதிவீரபாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இந்த பயிலரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் தமிழில் பேச, எழுத தமிழக இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது தெரிகிறது.

இதுபோன்ற பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி