ஆப்நகரம்

நிர்மலா தேவி விவகாரம்; பல்கலைக்கழக விசாரணைக்குழு வாபஸ்!

நிர்மலா தேவி மீதான பல்கலைக்கழக விசாரணைக்குழு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Apr 2018, 3:39 pm
சென்னை: நிர்மலா தேவி மீதான பல்கலைக்கழக விசாரணைக்குழு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Nirmala Devi
நிர்மலா தேவி


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில், மாணவிகளை பாலியல் விஷயங்களுக்கு வற்புறுத்திய உதவி பேராசிரியை நிர்மலாதேவி இணையத்தில் வைரலான ஆடியோ மூலம் சிக்கினார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த விவகாரத்தில், மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார்.

அதேபோல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலாலை, துணைவேந்தர் செல்லத்துரை இன்று நேரில் சந்தித்தார்.

இதையடுத்து தங்கள் விசாரணைக்குழுவை வாபஸ் பெறுவதாக மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை அறிவித்துள்ளார்.

மேலும் ஆளுநர் அறிவித்த விசாரணைக் குழு அதிகாரி சந்தானத்துக்கு, பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பை நல்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நிர்மலா தேவி வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Madurai University withdraws enquiry commission in Nirmala Devi case.

அடுத்த செய்தி