ஆப்நகரம்

மதுரை சுற்றுச்சாலை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தாதம்பட்டியிலிருந்து சிட்டம்பட்டிவரை ரிங்ரோடு அமைக்கும் பணியில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 24 Apr 2019, 10:14 pm
அலங்காநல்லுார் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த அம்பிகாபதி உயர்மன்ற மதுரைக் கிளையில் மனுவினை செய்திருந்தார். அதில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தாதம்பட்டியிலிருந்து சிட்டம்பட்டிவரை ரிங்ரோடு அமைக்க மத்திய சாலை போக்குவரத்துத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை 2018 ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்டது.
Samayam Tamil மதுரை சுற்றுச்சாலை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு
மதுரை சுற்றுச்சாலை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு


சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது. முல்லைப் பெரியாறு பாசன இருபோக பாசன நிலம், கால்வாய்கள், நீர்நிலைகள், வனப்பகுதி வழியாக சாலை அமைக்க உள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதோடு, இதற்காக மத்திய அரசின் சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு பிரிவிடம் அறிக்கை பெறவில்லை.

வனத்துறையிடம் தடையில்லாச் சான்றும் பெறவில்லை. நில மக்களிடம் கருத்துக் கேட்பும் நடத்தவில்லை. எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிப்பில் தெளிவுபடுத்தவில்லை. சாலை அமைக்க தற்போது எல்லைக் கற்கள் நடும்பணி நடைபெற்று வருகிறது. ஆகவே, சாலை அமைக்கும் அறிவிப்பிற்கு தடை விதித்து, ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இவ்விவகாரம் தற்போது எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலை தொடர வேண்டும். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி