ஆப்நகரம்

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மதுரையில் ஒரு பெண் பலி!!

மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர், பன்றிக் காய்ச்சால் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Oct 2018, 9:28 pm
Read In English
Samayam Tamil பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மதுரையில் ஒரு பெண் பலி!!
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மதுரையில் ஒரு பெண் பலி!!

மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர், பன்றிக் காய்ச்சால் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பன்றிக் காய்ச்சல் நோய் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. கர்நாடகாவில் மட்டும் இதுவரையில் நூற்றுக்கணக்கான மக்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், தமிழகத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன், 4 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, மதுரையில் உள்ள பைகாரா பகுதியைச் சேர்ந்த மீனாட்சி (47) என்பவர் கடுமையான காய்ச்சலுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று உயிரிழந்த நிலையில், அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அவர் சர்க்கரை நோயாலும், நுரையீரல் அழற்சியாலும் பாதிக்கப்பட்டிருந்ததால், அதன் பாதிப்பு தீவிரமாகியுள்ளது.

இந்நிலையில், பன்றிக்காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், மதுரை அனுபானடியைச் சேர்ந்த அகிலன் (21) என்ற இளைஞரும் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி