ஆப்நகரம்

மதுரை பெண்ணிடம் 25 பவுன் நகைகள் கொள்ளை

மதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் கமிஷனர் அலுவலக அதிகாரி மனைவியிடம் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

TNN 17 Aug 2017, 2:44 pm
மதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் கமிஷனர் அலுவலக அதிகாரி மனைவியிடம் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
Samayam Tamil madurai women jewelry robbery
மதுரை பெண்ணிடம் 25 பவுன் நகைகள் கொள்ளை


மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த ராஜசேகரன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி ( 52). நேற்று வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரியிடம் 2 வாலிபர்கள் உங்கள் மகனின் நண்பர்கள் என்று அறிமுகமாகி திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வீட்டிற்குள் வந்தனர்.

ஆனால், ராஜேஸ்வரி தனது மகன் வந்த பிறகு திருமண அழைப்பிதழை கொண்டு வருமாறு கூறி கதவைத் திறக்க மறுத்துள்ளார். பின் அந்த வாலிபர்கள் தாகமாக இருக்கிறது என்று தண்ணீர் கேட்டுள்ளனர். இதனால் கதவை திறந்துவிட்டு நீர் எடுக்க சமையல் அறைக்கு சென்ற ராஜேஸ்வரியை பின்தொடர்ந்த வாலிபர்கள் திடீரென்று ராஜேஸ்வரியின் வாயை துணியால் அடைத்தும் கைகளை கயிற்றால் கட்டிய பிறகு, ராஜேஸ்வரி அணிந்திருந்த நகைகள் உட்பட பீரோவில் இருந்த சுமார் 25 பவுன் நகைகளை எடுத்து கொண்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் மதுரை மக்களிடையே கலக்கத்தை ஏற்பத்தியுள்ளது.

Madurai women jewelry robbery

அடுத்த செய்தி