ஆப்நகரம்

நிரம்பிவழியப் போகும் மதுராந்தகம் ஏரி..? உஷாரா இருங்கப்பா

இதன் நீர்ப்பாதையில் அமைந்திருக்கும் ஊர்களான, கத்திரிச்சேரி, வளர்பிறை, கடப்பேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம நிலங்கள் இதனால் எச்சரிக்கை செய்யப்பட வேண்டிய பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 3 Dec 2019, 9:16 pm
தமிழகத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி தற்போது அதன் முழுக்கொள்ளவை எட்ட உள்ளது. சுமார் 2,411 ஏக்கர் பரப்பளவு நீர்பிடிப்புப் பகுதி கொண்டது இந்த ஏரி. ஏறக்குறைய 36 கிராமங்கள் இந்த ஒரு ஏரி நீரால் பயனடகின்றன.
Samayam Tamil Madurantakam Lake


தொடர்ந்து கனமழை காரணமாக, மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. சரியாக 23 அடி கொள்ளளவு கொண்ட மதுராந்தகம் ஏரி, தற்போது 22 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வருவாய்த்துறை குழுவினர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அணையின் நிலை குறித்து ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் ஏரி நிரம்பி வழிவதற்குள் மக்களை எச்சரிக்கை செய்வதும், மாற்று ஏற்பாடுகளைச் செய்வதும் அவசியமாகிறது.

இதன் நீர்ப்பாதையில் அமைந்திருக்கும் ஊர்களான, கத்திரிச்சேரி, வளர்பிறை, கடப்பேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம நிலங்கள் இதனால் எச்சரிக்கை செய்யப்பட வேண்டிய பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ஏரி நிரம்பிவிட்டால், சுமார் 84 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும். எனினும் அதீத நீர்வரத்து அபாயம் என்பதால் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அடுத்த செய்தி