ஆப்நகரம்

முதுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ! விமானப்படை உதவியை கேட்காத தமிழக அரசு

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. காட்டுத்தீயை அணைக்க தமிழக அரசு விமானப்படையின் உதவியை நாடாமல் உள்ளது

Samayam Tamil 26 Feb 2019, 3:10 pm
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சனியன்று பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பலத்த காற்று வீசியதால், தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. தொடர்ந்து இரவும் பகலும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடிய நிலையில், நேற்று மதியம் தீ அணைக்கப்பட்டது.

தொடர்ந்த இந்த காட்டுத்தீயில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு முற்றிலும் எரிந்து நாசமானது. பெரிய பெரிய வனவிலங்குகள் காட்டுத்தீயில் இருந்து தப்பியது. இருப்பினும், சிறிய விலங்குகள் தப்ப வழியின்றி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. முதுமலை காட்டுத்தீ குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், சமூகவிரோதிகள் தான் காட்டுத்தீயை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்திலும் தற்போது காட்டுத் தீ ஏற்பட்டது. ஆனால், அம்மாநில அரசு ராணுவ ஹெலிகாப்டர் உதவிகோரி அதன் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியது. .ஆனால், தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுமலையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க தமிழக அரசு விமானப்படையின் உதவியை நாடாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி