ஆப்நகரம்

மதுரையில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோத இருந்த பெரிய விபத்து தவிர்ப்பு!

மதுரை அடுத்துள்ள திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோத இருந்த பெரிய விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 May 2019, 7:49 pm
மதுரை அடுத்துள்ள திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோத இருந்த பெரிய விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Train Accident


நேற்று மாலை சிக்னல் கோளாறு காரணமாக மதுரை - செங்கோட்டை ரயிலும், செங்கோட்டை - மதுரை ரயிலும் திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்து கொண்டிருந்தன.

இதை அறிந்த ரயில்வே அதிகாரிகள் ரயில் ஓட்டுனருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்ததன் பெயரில், இரு ரயில்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

இதனால் பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டன. பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து உடனடியாக சிக்னல் சரிசெய்யப்பட்டது.

இதன் காரணமாக இரு ரயில்களும் தாமதமாக சென்றன. சிக்னல் கோளாறு, ரயில் விபத்து தவிர்ப்பு பற்றி அறியாத பயணிகள் ரயில் புறப்பாடு தாமதமானது குறித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி