ஆப்நகரம்

பாட புத்தகத்தில் ஜெ.,வின் படத்தை நீக்கியவர்கள் கைது

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியான ஜெ.,வின் புகைப்படத்தை பாட அகற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

TNN 21 Feb 2017, 12:17 am
திருச்சி : சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியான ஜெ.,வின் புகைப்படத்தை பாட அகற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil makkal athikaaram orginiser remove jayalalitha photo from school book
பாட புத்தகத்தில் ஜெ.,வின் படத்தை நீக்கியவர்கள் கைது


திருச்சியில் உள்ள மரக்கடையில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சென்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாணவர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கினார்கள். அதிலிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்து திருவள்ளுவர் படத்தை ஓட்டினார்கள்.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம் பாட புத்தகத்தில் இடம்பெற்றால் மாணவர்களுக்கு தவறான பாடம் கற்பிக்கப்படும் என்று கூறி அங்கிருந்த மாணவர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி திருவள்ளூவர் படத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஒட்டினார்கள்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெ.,யின் படத்தை அகற்றுவதை நிறுத்துமாறு கூறினார்கள் ஆனால் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அதற்கு மறுக்கவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.

makkal athikaaram orginiser remove jayalalitha photo from school book

அடுத்த செய்தி