ஆப்நகரம்

மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழர் முன்னேற்றப் படை ஆதரவு

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும், அதன் வெற்றிக்காக இணைந்து பணியாற்றுவதாகவும் தமிழர் முன்னேற்றப் படை கட்சி உறுதியளித்துள்ளது.

TNN 22 Mar 2016, 2:33 pm
சென்னை: எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும், அதன் வெற்றிக்காக இணைந்து பணியாற்றுவதாகவும் தமிழர் முன்னேற்றப் படை கட்சி உறுதியளித்துள்ளது.
Samayam Tamil makkal nala kootani joins hands with tamilar munnetra padai
மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழர் முன்னேற்றப் படை ஆதரவு



இன்று (22.03.2016) காலை 11 மணிக்கு தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி , அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் நா.கணேசன் உள்ளிட்டவர்கள், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.



இதனை ஏற்றுக்கொண்ட வைகோ, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.

அடுத்த செய்தி