மக்கள் நலப்பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
திருச்சியில் மக்கள் நலப்பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
TNN 24 Feb 2016, 6:08 pm
திருச்சி: திருச்சியில் மக்கள் நலப்பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகே மக்கள் நலப்பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோதியின் முயற்சியைத் தடுத்த போலீசார், அவர் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகே மக்கள் நலப்பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோதியின் முயற்சியைத் தடுத்த போலீசார், அவர் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.