ஆப்நகரம்

மக்கள் நீதி மய்யம் 18 தொகுதியிலும் போட்டி: இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Mar 2019, 2:09 pm
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamal


வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படயிருக்கிறது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுளில் 18க்கு மட்டும் தேர்தல் நடத்தப்படயிருக்கிறது. இந்த நிலையில், இந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ள வேட்பாளர்கள் விருப்பமனு இன்று (14ம் தேதி) முதல் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையங்களில் பெற்றுக்கொள்ளலாம். அதோடு, கட்சியின் இணையதள பக்கத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை வரும் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனுவுடன் ரூ.10 ஆயிரத்துக்கான வரைவோலையை டிடியை மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் எடுத்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி