ஆப்நகரம்

சும்மா விட மாட்டேன்: கட்சியினருக்கு கமல்ஹாசன் கட்டுப்பாடு!

எனக்கு சோதனைகளும், விமர்சனங்களும் புதிதல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 11 May 2021, 8:25 pm

ஹைலைட்ஸ்:

  • எனக்கு சோதனைகளும், விமர்சனங்களும் புதிதல்ல
  • என் நேர்மையை சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். கட்சி வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டு வருவதாகவும், கமல் ஒரு சில நபர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும் மகேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக, சங்கையா என்ற நிறுவனம் குறித்தும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
சங்கையா நிறுவனத்தின் சுரேஷ் ஐயர் ஒரு கையாள் போன்றவர். இதற்கு ராஜதந்திரி விஜய் டிவி முன்னாள் மகேந்திரன். அவர்தன் சங்கையா நிறுவனத்தை கொண்டு வந்தார். கட்சியை தவறாக வழிநடத்திய அவர்கள், காலப்போக்கில் கட்சியை ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டனர் என்றும், இந்த நிறுவனமே கமல்ஹாசனின் அறிவுறுத்தல் பேரில் ஆரம்பிக்கப்பட்டது தான் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழுக்கு மகேந்திரன் பிரத்யேக பேட்டியில் முன் வைத்திருந்தார்.

இதனிடையே, நிர்வாகிகள் ராஜினாமா குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தனர். அவர்களை களையெடுக்க வேண்டும். தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக் கொண்டு ஓடும் கோழைகளை பற்றி நாம் ஒரு போதும் பொருட்படுத்தியது இல்லை என்று தெரிவித்திருந்தார்.

அதேசமயம், தேர்தல் தோல்வி எதிரொலி மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதால் கட்சியை கமல்ஹாசன் விரைவில் கலைத்து விடுவார் என்றும் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் எதன் காரணமாகவும் தன் பணியை நிறுத்தாது. முன்பை விட வேகமாக செயல்பட்டு மக்களின் ஆதரவை கட்சி பெறும் என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், எனக்கு சோதனைகளும், விமர்சனங்களும் புதிதல்ல. என் நேர்மையை சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி நிர்வாகிகள் யாரும் முன் அனுமதியின்றி நேரடியாகவோ, இணையவழியிலோ ஊடகத்தினரிடம் பேசக்கூடாது என்றும் கமல்ஹாசன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அடுத்த செய்தி