ஆப்நகரம்

அடுத்த கூட்டம் திருச்சியில்; மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் அறிவிப்பு!

தனது கட்சியின் அடுத்த கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Feb 2018, 3:36 pm
சென்னை: தனது கட்சியின் அடுத்த கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil makkal needhi maiam conducts next meeting in trichy says kamal haasan
அடுத்த கூட்டம் திருச்சியில்; மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் அறிவிப்பு!


மதுரையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை நடிகர் கமல் ஹாசன் தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் கொடி, நிர்வாகிகள் உள்ளிட்டோரை அறிவித்தார்.

இதையடுத்து சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்று கூறினார்.

மக்கள் பிரச்சனைகளுக்காக பிற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளது. ஆனால் தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே தெரிய வரும்.

மரபணு மாற்ற விதை என்று விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார் குறித்த கேள்விக்கு, விஞ்ஞானமே பேசியது போல் உள்ளது என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.

Makkal Needhi Maiam conducts next meeting in Trichy says Kamal Haasan.

அடுத்த செய்தி