ஆப்நகரம்

அழுத்தம் கொடுக்கவே வந்தேன்: செவிலியர்கள் போராட்டத்துக்கு கமல் ஆதரவு!

பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார்

Samayam Tamil 28 Sep 2021, 5:44 pm

ஹைலைட்ஸ்:

  • நல்ல அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமே தவிர இருக்கும் வேலைவாய்ப்புகளை குறைக்க கூடாது
  • கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் முடிந்து விட்டதாக அரசு கருத வேண்டாம்
  • செவிலியர்களை பணியில் தக்க வைத்துக் கொள்வது நமது கடமை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கமல்ஹாசன்
கமல்ஹாசன்
கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செவிலியர்களின் நியாயமான போராட்டத்தில் எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம். கொரோனா காலத்தில் செவிலியர்கள் சேவையின் பலனாக பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இவர்களின் பணி நமக்குத் தேவை என்றார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் முடிந்து விட்டதாக அரசு கருத வேண்டாம். இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தொற்றின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். எனவே, செவிலியர்கள் பணி முடிந்து விட்டது போல் சிதறடிப்பது நியாயமில்லை. இவர்களின் கோரிக்கை நியாயமானது. இவர்களின் சேவை நமக்கு தேவை. செவிலியர்களை பணியில் தக்க வைத்துக் கொள்வது நமது கடமை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
ஒரு நல்ல அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமே தவிர இருக்கும் வேலைவாய்ப்புகளை குறைக்க கூடாது என்று தெரிவித்த அவர், அரசு இவர்களின் போராட்டத்தை கவனமுடன் அணுகி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், போராட்டத்தை ஒரு சமூகமாக முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவே போராட்டக் களத்துக்கு வந்ததாகவும் அப்போது கமல்ஹாசன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி