ஆப்நகரம்

ஜனநாயகத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல்- கமல் கொந்தளித்த பின்னணி இதுதான்!

சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்ட விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Aug 2019, 9:55 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து, மத்திய அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தன.
Samayam Tamil Kamal Haasan


இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், காஷ்மீர் விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப் பிரிவுகளை நீக்கியது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்.

Also Read: காஷ்மீர் விவகாரத்தில் அப்பவே மாஸ் காட்டிய ஜெயலலிதா - இன்னைக்கும் இந்தப் பேச்சு தான் டிரெண்டிங்!

இதுபோன்ற முக்கியமான விஷயங்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்திருக்க வேண்டும். ஆனால் அசுர பலம் பெற்றுள்ள பாஜக அரசு, தங்கள் ஏதேச்சதிகாரம் மூலம் முடிவெடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கென சிறப்பு சட்டப்பிரிவுகள் இயற்றப்பட்டதற்கு வரலாறு உள்ளது.

Also Read: காஷ்மீர் விவகாரத்தில் அதிமுக ஆதரவு; பேசாம உங்க கட்சிக்கு இப்படி பெயரை மாத்திக்கோங்க - ஸ்டாலின்!

எனவே அதில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் தக்க ஆலோசனையின் படி நடந்திருக்க வேண்டும். இதற்காக தனியாக விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயகத்தின் எதிர்க்குரல்களை முடக்கும் அரசின் ஆதிக்கப் போக்கை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது.

Also Read: இனி காஷ்மீர் பிரச்சினை அனைத்துலக நாடுகளின் பிரச்சினையாகிவிடும்- வைகோ கடும் எதிர்ப்பு!

கடந்த முறை பணமதிப்பிழப்பு விவகாரத்தைக் கொண்டு வந்தது. இம்முறை 370 சட்டப்பிரிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இவை சர்வாதிகாரம், பிற்போக்குத்தன்மையின் செயல்கள் என்று குற்றம்சாட்டியுள்ளது.

அடுத்த செய்தி