ஆப்நகரம்

படிப்பை நிறுத்திய எடப்பாடி சகோதரிகளுக்கு கமல் ஹாசன் நிதியுதவி!

வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திய எடப்பாடியைச் சேர்ந்த சகோதரிகளுக்கு கமல் ஹாசன் நிதியுதவி அளித்ததோடு அவர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 3 Nov 2018, 7:36 pm
வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திய எடப்பாடியைச் சேர்ந்த சகோதரிகளுக்கு கமல் ஹாசன் நிதியுதவி அளித்ததோடு அவர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.
Samayam Tamil kamal


சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த தங்கராஜ் கேரளாவுக்கு விற்பனைக்கு துணிகளை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். சமீபத்தில் கேரளா வெள்ளத்தால் பெரும் அவதிக்குள்ளான தங்கராஜ், 12ம் வகுப்பு படித்து வந்த மகள் தமிழரசிக்கும், 11ம் வகுப்பு படித்து வந்த 2வது மகள் வைஷ்ணவிக்கும் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இதன் காரணமாக, இருவருமே படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதற்கிடையில், மாணவிகள் இருவரும் யோகா, பேச்சுப்போட்டி, விளையாட்டு என்று பல துறைகளில் 50க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்று திறமை வாய்ந்தவர்களாக இருந்ததாக செய்தி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மாணவிகள், படிப்பை நிறுத்திய தகவலறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், மாணவிகள் இருவரையும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு வரவழைத்து நிதியுதவி வழங்கியதோடு, படிப்பை தொடர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.

அடுத்த செய்தி