ஆப்நகரம்

சென்னை பல்கலைக்கழகத்துக்கு உலக நாயகன் திடீர் விஜயம்... இதுதான் விஷயம்!!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் இன்று திடீரென, சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 18 Dec 2019, 9:23 pm
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசம், அலிகார் பல்கலைக்கழகம் எனத் தொடங்கி, சென்னைப் பல்கலைக்கழகம் வரை, பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்தையடுத்து, இன்று முதல் (புதன்கிழமை) வரும் 23ஆம் தேதி வரை, விடுமுறை அறிவித்து சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று (செவ்லாய்க்கிழமை) உத்தரவிட்டிருந்தது.

சென்னைப் பல்கலை.போராட்டம்: லைவ் ரிப்போர்ட்!

இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்குள், சுமார் ஆயிரம் மாணவ, மாணவியர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க சென்றார்.

ஆனால், பல்கலைக்கழக வளாகத்துக்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, நுழைவாயில் கேட் அருகே நின்றப்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேசிய கமல், இந்தப் போராட்டத்துக்கு தனது ஆதரவு உண்டு என பகிரங்கமாக தெரிவித்தார்.

அப்போது, "தங்களை பல்கலைக்கழகத்துக்குள் செல்ல நிர்வாகம் அனுமதிக்கவில்லை, விடுதி மாணவர்களுக்கு காலை முதல் உணவு வழங்கப்படவில்லை" என்பன உள்ளிட்ட தங்களது பல்வேறு குறைகளை மாணவ, மாணவியர் கமல் ஹாசனிடம் கொட்டித் தீர்த்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் : உலக நாயகன் எடுத்துள்ள அதிரடி முடிவு !!

அப்போது, பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே நின்றபடி மாணவர்களிடம் கலந்துரையாடிய கமல் ஹாசன், "எனக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. நான் இறக்கும் வரை, எனை ஒரு மாணவன் என்றுதான் அழைத்துக் கொள்வேன். மாணவர்களின் பாதுகாவலனாக அவர்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன்.

படிக்கும் இடத்திலேயே மாணவர்களை அகதியாக்கியுள்ளது மத்திய அரசு. குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். போராடும் மாணவர்களுக்கு உணவு கொடுக்காமல் கல்லூரி உணவகங்களை பூட்டியது இந்த அரசிற்கு அவமானம்" என கமல் பேசினார்.

அடுத்த செய்தி