ஆப்நகரம்

கருணாநிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் அவருடைய முழுஉருவச்சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

Samayam Tamil 7 Aug 2019, 6:50 pm
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கருணாநிதியின் முழுஉருவச்சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.
Samayam Tamil karunanidhi statue on his first death anniversary


Click Here to read this article in Bengali language
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்தாண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலாமானார். இன்று அவருக்கு முதலாமாண்டு நினைவு தினம். இதை ஒட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருணாநிதியின் முழுஉருவச் சிலையை திறந்து வைத்தார். கருணாநிதி அமர்ந்த நிலையில், எழுதுவது போல் சிலை சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவருடைய ஐந்து கட்டளைகள் சிலையின் அடியில் உள்ள பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

Also Read This:

கருணாநிதி சிலை திறப்புக்கு பின்னர், சிலை அருகில் இருந்து மம்தா பானர்ஜி, நாராயணசாமி, ஸ்டாலின் உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திராவிடக் கட்சி தலைவர் கி வீரமணி, கவிஞர் வைரமுத்து, திமுக எம்.எல்.,க்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி