ஆப்நகரம்

கந்துவட்டி கொடுமையால் மூவர் பலி: கந்துவட்டி கொடுத்த தம்பதியர் கைது

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த குடும்பத்தினருக்கு கந்து வட்டி கொடுத்த தம்பதியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

TNN 24 Oct 2017, 12:55 pm
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த குடும்பத்தினருக்கு கந்து வட்டி கொடுத்த தம்பதியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil man and his family self emolliated incident couples who lend money for them were arrested
கந்துவட்டி கொடுமையால் மூவர் பலி: கந்துவட்டி கொடுத்த தம்பதியர் கைது


நெல்லையில் நேற்று கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் 4 பேர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதில் மூன்றுபேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர். இசக்கிமுத்து என்ற ஒருவர் மட்டும் உயிருக்கு ஊசலாடியபடி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மூவர் மரணத்திற்கு காரணமான கந்துவட்டி கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்திய நிலையில் கந்துவட்டி வழங்கிய தம்பதியர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த விசாரணை முடிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

man and his family self emolliated incident couples who lend money for them were arrested

அடுத்த செய்தி