ஆப்நகரம்

கரூரில் திருமணம் முடிந்த கையோடு பிஎட் தேர்வு எழுத வந்த மணமகன் மற்றும் மணமகள்…

கரூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு, இரு வேறு இடங்களில் மணமகன் மற்றும் மணமகள் பிஎட் தேர்வு எழுதிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.

TNN 31 May 2017, 1:16 am
கரூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு, இரு வேறு இடங்களில் மணமகன் மற்றும் மணமகள் பிஎட் தேர்வு எழுதிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil man and woman write exam after marriage in karur
கரூரில் திருமணம் முடிந்த கையோடு பிஎட் தேர்வு எழுத வந்த மணமகன் மற்றும் மணமகள்…


கரூர் அடுத்த சின்னாளம்பட்டியை சேர்ந்த காமராஜ் மகன் பாரதிமுருகன்(27). கரூர் தனியார் பி.எட் கல்லூரியில் பி.எட். படித்தார். நேற்று இவருக்கும் டி.கூடலூரை சேர்ந்த மைதிலி என்பவருக்கும் காலையில் திருமணம் நடந்தது. நேற்று திருமணம் முடிந்த கையோடு பாரதிமுருகன் காரில் வந்து பட்டுவேட்டி சட்டையுடன் மணக்கோலத்தில் தேர்வு எழுதினார். அதுவரை மணமகள் மைதிலி காரில் காத்திருந்தார்.

தேர்வு முடிந்ததும் இருவரும் காரில் மாலை நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக புறப்பட்டு சென்றனர்.

இதேபோன்று, சித்தலவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமப்பிரியா. பி.எட். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் தொட்டியம் அருகேயுள்ள கீழக்காரைக்காடு பகுதியைச் சேர்ந்தவருக்கும் நேற்று தொட்டியம் திருநாராயணபுரம் கோயிலில் திருமணம் நடந்தது. நேற்று பி.எட். 2ம் ஆண்டு தேர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மணமகள் ஹேமப்பிரியா கணவர் மற்றும் பெற்றோரிடம் தேர்வு எழுத சம்மதம் பெற்றார்.

கார் மூலம் தொட்டியத்திலிருந்து முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுரிக்கு மணக்கோலத்தில் கணவருடன் வந்தார். ஹேமப்பிரியாயாவை மணப்பெண் அலங்காரத்தில் பார்த்த தோழிகள் உற்சாகம் அடைந்தனர். ஹேமப்பிரியா தேர்வை எழுதி முடிக்கும்வரை அவரது கணவர் கல்லுரி வளாகத்தில் காத்திருந்தார். தேர்வு முடித்து வந்த மணப்பெண்ணை ஆசிரியர்களும் அங்கிருந்தவர்களும் வாழ்த்தினர்.

அடுத்த செய்தி