ஆப்நகரம்

அதிர்ஷ்டம் வரும் என எதிர்பார்த்து குள்ளநரியை வளர்த்த ஆசாமி கைது

நரி ஊளையிடுவதைக் கேட்டால் அதிர்ஷ்டம் வரும் என எதிர்பார்த்து நரியை வளர்த்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 9 Sep 2018, 9:18 pm
நரி ஊளையிடுவதைக் கேட்டால் அதிர்ஷ்டம் வரும் என எதிர்பார்த்து நரியை வளர்த்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil 153650545728009


விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காக்கிவாடன்பட்டியைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் ரத்தினசாமி. இவர் தனது ஆலையில் குள்ளநரியை யாரும் அறியாமல் வளர்த்து வந்திருக்கிறார்.

குள்ளநரியின் முகத்தில் விழித்து, அதன் ஊளைச் சத்தத்தைக் கேட்டால் அதிர்ஷ்டம் வரும் என்ற மூட நம்பிக்கையைப் பின்பற்றி, காட்டிலிருந்து குள்ளநரியைப் பிடித்து வந்திருக்கிறார்.

தனது கூண்டில் நரிகை அடைத்து வைத்து வளர்த்து வந்துள்ளார். மேலும் தினமும் ஆலைக்கு வந்தவுடன் நரியின் முகத்தில் விழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சில நாட்களில் நரி ஊளையிடும் சத்தம் அக்கம் பக்கத்தினருக்குத் தெரிந்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த செய்தி