ஆப்நகரம்

மருமகனுடன் இணைந்து கணவனைக் கொன்ற மனைவி!!

திருநெல்வேலியில் மருமகனுடன் இணைந்து கணவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Mar 2018, 11:39 am
திருநெல்வேலியில் மருமகனுடன் இணைந்து கணவரை அடித்துக் கொன்ற சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil women-fight2_0


திருநெல்வேலியில் உள்ள கோவிலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்தங்கதுரை. இவருக்கு 43 வயது. கேரளாவில் தினக்கூலியாக வேலை செய்துவந்தார். அவருக்கு செல்வி என்றமனைவியும், ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். 38 வயதான செல்விக்குகுருதிவாக்கர் என்ற இளைஞருடன் பல நாட்களாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.குருதிவாக்கர் அதே ஊரில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

இந்த உறவை மறைக்க செல்வி தனது மகளுக்கே அவரை திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் இதற்கு அவரது கணவர் சம்மதிக்கவில்லை.தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்தசெல்வி, குருதிவாக்கருடன் சேர்ந்து தங்கதுரையை கடுமையாக தாக்கியுள்ளார். இருவரும் அவரை சாகும் வரை அடித்துள்ளனர். பின்னர் இவரது உடலை யாருக்கும் தெரியாமல்அப்புறப்படுத்த முடிவெடுத்துள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சேர்ந்தாமரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் துரைமுருகனின் உடலை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காகதிருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். உடல்கூறு ஆய்வில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர்செல்வி மற்றும் குருதிவாக்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி