ஆப்நகரம்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன்

மதுரை: மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் போது சமரசத்திற்கு வந்த மாமியாரின் காதை மருமகன் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Apr 2019, 7:17 pm
மதுரையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டனையில் ஆத்திரமடைந்த கணவர் தனது மாமியாரின் காதை கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சமரசத்திற்கு வந்த மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன் கைது
சமரசத்திற்கு வந்த மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன் கைது


சமயநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார். ஐந்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எனினும் இந்த தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை பிறக்காததால் அடிக்கடி அவர்களுக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனால் அண்மையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் என்றும் தம்பதிகள் தரப்பிலிருந்து தகவல் கூறுகின்றனர்.

இந்நிலையில், நேற்று கவிதாவின் அம்மா வீட்டுக்கு முத்துக்குமார் சென்றுள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கவிதாவின் தாயார் லட்சுமி பிரச்னையை தடுக்க முன்வந்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், லட்சுமியின் காதை இழுத்து பிடித்து கடித்துவிட்டார். இதனால் லட்சுமி அலற, அவரது வலது காதிலிருந்து ரத்தம் கொட்டியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்தனர்.

லட்சுமி அலறி துடித்ததை பார்த்த அவர்கள், உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தனது அம்மாவின் காதை கடித்த கணவர் முத்துக்குமார் மீது ஆத்திரமடைந்த கவிதா போலீசில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்தனர். லட்சுமிக்கு ரத்தம் ஓட்டம் நிறுத்தப்பட்டு, தனது கடிப்பட்ட வலது காதில் தையம் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி