ஆப்நகரம்

பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டிய நபர் மீது வழக்குப் பதிவு

மதுரையில் பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை முகநூலில் வெளியிடுவதாக மிரட்டிய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 17 Feb 2019, 5:24 pm
மதுரையில் பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை முகநூலில் வெளியிடுவதாக மிரட்டிய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Samayam Tamil download (1)


மதுரை பழங்காநத்தம் பகுதியில் 31 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, ராஜா அலாவுதின் என்பவர் முகநூலில் தொடர்பு கொண்டு, இவரது அந்தரங்க புகைப்படம் தன்னிடம் இருப்பதாகவும், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அவரின் புகைப்படத்தை முகநூலில் வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை செய்து, ராஜா அலாவுதினை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த நபர் அந்த பெண்ணுக்கு தெரிந்தவராக இருந்ததால், காவல்துறையினர் அவரை எச்சரித்திவிட்டு அனுப்பி வைத்தனர். அப்போது குற்றத்தை ஒப்புக் கொண்ட ராஜா அலாவுதின், சில நாட்களுக்கு பிறகு மீண்டும் முகநூலில் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண் மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி