ஆப்நகரம்

உளவுத்துறை போலீஸ் என்று கூறி முதியவரிடம் மோதிரம் பறிப்பு: சென்னையில் அதிர்ச்சி

முதியவரிடம் உளவுத்துறை அதிகாரிகள் போல நடித்து மோதிரம் பறித்து சென்ற கும்பலை சென்னை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 24 Sep 2018, 7:25 pm
நடைபயிற்சிக்கு சென்ற முதியவரிடம் உளவுத்துறை அதிகாரிகள் என்று கூறி மர்ம கும்பல் ஒன்று நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil CHENNAI_POLICE
முதியவரிடம் உளவுத்துறை போலீஸ் போல் நடித்து மோதிரம் பறிப்பு


சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம் (70). இவர் தினமும் லஸ் சர்ச் சாலையில் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல இன்றும் இவர் அந்த பகுதியில் நடை பயிற்சி சென்ற போது, ஆட்டோவில் வந்த ஒருவர் பரமசிவத்தை பார்த்து அவசர கட்டிட வேலைக்கு ஆள் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

பரமசிவமும் அதற்கு சம்மதம் தெரிவித்து, ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு, அந்த நபர் தான் ஒரு உளவுத்துறை காவலர் என்று கூறியுள்ளார். மேலும் பரமசிவம் அணிந்திருந்த மோதிரம் திருட்டு மோதிரமாக இருக்கலாம் என்று கூறி அதை சரிபார்க்க வேண்டும் என்று சொல்லி அதை கழட்ட சொல்லியுள்ளார்.

ஆனால் அதற்கு பரமசிவம் மறுப்பு தெரிவிக்க, அவரை மிரட்டி கத்தியை காட்டி மிரட்டி மோதிரத்தை பறித்துள்ளனர். மேலும் பரமசிவத்தை ஆட்டோவிலிருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். தற்போது பாதிக்கப்பட்ட பரமசிவம் இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தி.நகர் அருகே ஆட்டோ சென்ற போது தான் தன்னை அந்த கும்பல் கீழே தள்ளிவிட்டதாக புகாரில் பரமசிவம் குறிப்பிட்டுள்ளார். அதனை அடிப்படையாக வைத்து மயிலாப்பூர் காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த செய்தி