ஆப்நகரம்

மாரடைப்பால் மரணம்: பாதயாத்திரை செல்லும் போது பரிதாபம்

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் போது, மாரடைப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 8 Jan 2017, 6:12 pm
மதுரை: பழனிக்கு பாதயாத்திரை செல்லும் போது, மாரடைப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil man dead who went for palani pilgrimage
மாரடைப்பால் மரணம்: பாதயாத்திரை செல்லும் போது பரிதாபம்


ஆறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடு 'பழநியம்பதி' ஆகும். பழநி மலையில் முருகன் ஞானமூர்த்தியாய் எழந்தருளி அருள்பாலித்து வருகிறார். பழனி முருகன் கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.

முருகனை வழிபடுவதற்கு எண்ணற்ற வழிபாட்டு முறைகள் இருந்த போதிலும், அவற்றில் பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடும் முறையே மேலோங்கி இருந்து வருகிறது.

இந்நிலையில், மதுரை வண்டியூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி லதா இருவரும் பழனி பாதையாத்திரை சென்றுள்ளனர். பாதயாத்திரை செல்லும் வழியில் வாடிப்பட்டி அருகே சென்ற போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சக்தி வேல் உயிரிழந்துள்ளார்.

பழனி பாதயாத்திரை போகும் வழியில் உயிரிழப்பு ஏற்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
Man dead who went for Palani pilgrimage

அடுத்த செய்தி