ஆப்நகரம்

தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலி!

தேனீக்கள் கொட்டியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 14 Mar 2019, 5:11 pm
தேனீக்கள் கொட்டியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil download (7)


கிருஷ்ணகிரியில் உள்ள ஒசபுரம் பகுதியை சேர்ந்தவர் பி ராஜப்பா. இவர் தளி என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் நின்ற புலியமரத்திலிருந்த புலிக் காய்களை வழியில் செல்லும் நபர்கள் பரித்துள்ளனர். அவர்கள் பரிக்கும்போது மரத்தில் இருந்த தேனீக்கூடு உடைந்துள்ளது.

இதனால் தேனீக்கூட்டிலிருந்து தேனிக்கள் வேகமாக வழியில் செல்பவர்களை கொட்டியுள்ளது. சிலர் அருகில் சென்ற ஓடையில் குதித்துள்ளனர். ஆனால் ராஜப்பாவால் தப்பிக்கமுடியவில்லை. அதிக தேனீக்கள் கொட்டியதால் மயக்கமடைந்த அவருக்கு முதல் உதவி செய்த கிராமமக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் ராஜாப்பா ஏற்கனவே உயிழந்துவிட்டதாக மருத்துவரக்ள தெரிவித்தனர். இந்த விவரம் தொடர்பாக தளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி