ஆப்நகரம்

சாலைத் தடுப்பில் மோதி குழிக்குள் கவிழ்ந்து இளைஞர் பலி; திருச்சி அருகே சோகம்!

திருச்சி: கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

Samayam Tamil 26 Dec 2018, 10:46 pm
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே கீழகுயில்குடியைச் சேர்ந்தவர் பெரியண்ணன்(58). இவரது மகன் அரவிந்த்ராஜ்(23), மகள் கோகிலா(26), தேன்மொழி(20) ஆவர்.
Samayam Tamil Dead


சிங்கப்பூரில் தங்கியிருந்த கோகிலா, தேன்மொழி மற்றும் அவரது மகள் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று திரும்பியுள்ளனர். அவர்களை அரவிந்த்ராஜ், பெரியண்ணன் ஆகிய இருவரும் வரவேற்று காரில் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. திருவரன்குறிச்சி அருகே கார் சென்ற போது, சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் நிலைதடுமாறி அருகிலிருந்த 15 அடி ஆழ குழிக்குள் விழுந்தது. இதில் படுகாயமடைந்த 5 பேரும் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த்ராஜ் உயிரிழந்தார்.

அடுத்த செய்தி