ஆப்நகரம்

மருத்துவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராததால் இளைஞர் உயிரிழப்பு!

மருத்துவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராததால் இளைஞர் உயிரிழப்பு!

TOI Contributor 7 Oct 2016, 3:51 am
கோவை : மருத்துவர்கள் பணியில் இல்லாத காரணத்தால் நெஞ்சு வலி காரணமாக ஆரம்ப சுகாதார நிலையம் வந்த இளைஞர் உயிரிழந்தார்.
Samayam Tamil man dies without getting medical attention in valparai
மருத்துவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராததால் இளைஞர் உயிரிழப்பு!


வால்பாறை அருகில் உள்ள சோலையார் டேம் பகுதியில் கருப்பசாமி (27) என்பவர் தன் மனைவி கௌரியுடன் (24) வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. டூவீலர் மெக்கானிக்காக கருப்பசாமி வேலை பார்த்து வந்திருக்கிறார். சம்பவதினத்தன்று கருப்பசாமி நெஞ்சு வலிக்கிறது என்றதும் அவரது மனைவி கௌரி அருகில் உள்ள சோலையார் டேம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு இரண்டு நர்ஸ்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். அவர்களால் கருப்பசாமிக்கு என்ன உடல்நிலை குறைபாடு என்று கண்டறியமுடியவில்லை. அதனால் மருத்துவர்கள் வரும் வரை இருவரையும் காத்திருக்க வைத்தனர்.

மருத்துவர்கள் வருவதற்குள் டீ குடித்துவிட்டு வரலாம் என்று கருப்பசாமியும், கௌரியும் சென்றனர். மறுபடியும் கருப்பசாமிக்கு வலி அதிகரிக்கவே மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அதுவரை மருத்துவர்கள் வராத காரணத்தினால் கௌரி, கருப்பசாமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு கருப்பசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதனையடுத்து பொது சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி