சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணியை,அவரதுகணவர் தனியாக விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது
சேலத்தை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கர்பமாக இருப்பதால் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மகப்பேரு மருத்துவமனைக்கு சென்ற ஜெனிபர் மற்றும் அவரது கணவர் சிகிச்சையை முடித்துவிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
சென்னையிலிருந்து சேலம் செல்லும் ரயிலில் ஜெனிபரை அமர வைத்துவிட்டு, அவரது கணவர் பயணச்சீட்டு வாங்கி வருவதாக கூறியிருக்கிறார். ஆனால் அவர் பல மணிநேரம் வராததால் ஜெனிபர் கடுமையாக அழுதுள்ளார். சம்பவயிடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் ஜெனிபரிடம் விசாரணை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜெனிபர் மைலாப்பூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.
சேலத்தை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கர்பமாக இருப்பதால் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மகப்பேரு மருத்துவமனைக்கு சென்ற ஜெனிபர் மற்றும் அவரது கணவர் சிகிச்சையை முடித்துவிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
சென்னையிலிருந்து சேலம் செல்லும் ரயிலில் ஜெனிபரை அமர வைத்துவிட்டு, அவரது கணவர் பயணச்சீட்டு வாங்கி வருவதாக கூறியிருக்கிறார். ஆனால் அவர் பல மணிநேரம் வராததால் ஜெனிபர் கடுமையாக அழுதுள்ளார். சம்பவயிடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் ஜெனிபரிடம் விசாரணை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜெனிபர் மைலாப்பூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.