ஆப்நகரம்

சென்னை அடுக்குமாடி குடியிருப்பிற்கு பெயிண்டிங்; தவறி மின் கம்பியில் விழுந்ததால் பயங்கரம்!

பெயிண்டர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வண்ணம் பூசிக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 2 Jul 2019, 9:32 am
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த சித்தாலப்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார்.
Samayam Tamil Dead


இந்நிலையில் நேற்று காலை சித்தாலப்பாக்கம் கண்ணியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டிடத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கு பெயின்டிங் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, கால் தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியின் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதையடுத்து கீழே உள்ள மாடியில் விழுந்துள்ளார்.

இதைக் கண்ட அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள், உடனடியாக அவசர ஊர்தி மற்றும் பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.

அதில் வந்த மருத்துவ ஊழியர்கள் பெயிண்டர் ரமேஷை பரிசோதனை செய்ததில், அவர் உடல் கருகி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி