ஆப்நகரம்

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி பலி

கரூர் : கரூர் தமிழ்நாடு காதித ஆலையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

TNN 6 Aug 2016, 3:44 pm
கரூர் : கரூர் தமிழ்நாடு காதித ஆலையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
Samayam Tamil man fall into the driange at karur
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி பலி


கரூரி தமிழ்நாடு காகித தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியை அந்த ஆலையின் தொழிலாளி சதா சிவம் என்பவர் சுத்தம் செய்தார். அவர் சுத்தம் செய்துகொண்டிருக்கும் போதே கால் தவறி அந்த கழிவு நீ தொட்டிக்குள் விழுந்து பலியானார்.

இதேபோல மதுரை மாவட்டம் மேலக்கால் பகுதியில் துப்புரவு தொழிலாளியான சோலை நாராயணன் என்பவர் விஷவாயு தாக்கி இன்று உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை பெரம்பூரில் மூன்று தொழிலாளிகள் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான சட்டத்தை தமிழக அரசு முறையாக நடைமுறை படுத்த வேண்டும். மேலும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் தொழிலாளிகள் ஈடுபடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி