ஆப்நகரம்

பைக்கின் இந்தப் பகுதிக்குள் நுழைந்த பாம்பு; 2 மணி நேர தேடலில் எகிறிய ரத்த அழுத்தம்!

சென்னை: பைக்கில் நுழைந்துக் கொண்ட பாம்பை பிடிக்க, 2 மணி நேரம் போராடினர்.

Samayam Tamil 28 Jan 2019, 9:08 pm
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் ஜமுவனோடாய் பகுதியில் உள்ள மசூதிக்குச் சென்றுள்ளார். அங்கு தனது பைக்கை நிறுத்தி விட்டுச் சென்றார். அந்த சமயத்தில் 3 மீ நீள பாம்பு ஒன்று, பைக்கில் ஏறியுள்ளது.
Samayam Tamil Snake


இதனைக் கண்ட பொதுமக்கள், உடனே உசேனிடம் தெரிவித்துள்ளனர். அவர் வருவதற்குள் பாம்பு எங்கோ சென்று ஒளிந்து கொண்டது. இதனால் பாம்பை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன் காரணமாக பயந்து போன உசேன், பைக்கை விட்டு சற்று தள்ளியே இருந்தார். அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள் பாம்பை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். பைக்கின் ஒவ்வொரு பகுதியாக கழட்டினர். டயரையும் கழட்டி தனியே வைத்தனர்.

இரண்டு மணி நேரத் தேடலுக்கு பின், பைக்கின் ஹெட்லைட்டில் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஹெட்லைட்டை தூக்கி கீழே போட்ட போது, பாம்பு அங்கிருந்து தப்பிச் சென்றது. அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்ததால், அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

அதன்பின்னர் அந்த பாம்பு விஷத் தன்மை கொண்டது அல்ல என்பதை உறுதிச் செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி